எனக்கு பிடித்த பாடல்

கே.பாலச்சந்தர் இயக்கி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு என்ற படத்தில் "ராகங்கள் பதினாறு உருவான வரலாறு" என்ற பாடல் என்னை மிகக்கவர்ந்த பாடல்களில் ஒன்று..
இப்பாடலுக்கு எம்.எஸ்.வி அவர்கள் இசையமைத்த விதம் மிக மிக மிக நன்று..!


இப்பாடலில் ரஜினி, நடிகை மாதவிக்கு பாடல் பாட கற்றுக்கொடுப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இவ்வரிகள்  ஒவ்வொன்றிற்க்கும் ஏற்றாற்போல் நம்ம சூப்பர் ஸ்டார், அவருக்கே உண்டான ஸ்டைலில் பல பாவனைகள் செய்திருப்பார்...
அதிலும் "அழகான இளம்பெண்ணின் மேனிதான் கூட  ஆதார சுதி கொண்ட வீணையம்மா" என்ற வரி வரும்போது மாதவியை பொய்யாக வர்ணிக்கிறார் என்பதை நமக்கு உணர்த்த நம்மைப்பார்த்து(கேமராவை) கண்ணடிப்பார். அடடா அருமையின் உச்சம்..! இப்பாடலுக்கு மேலுமொரு உச்சமாக எஸ்.பி.பி அவர்களின் குரல் அமைந்திருக்கும்... பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். இசைக்கு இசைந்த, இசையைப்பற்றியே வரிகள் அமைத்திருப்பார்...!


இதோ இந்த பாடலின் வரிகள்...
"ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது ஆ....ஆ....
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா..."
இதோ அந்த பாடலின் வீடியோவை பார்க்க
youtube.com/watch?v=JV6wCKuyVwM
இங்கே க்ளிக் செய்யவும்.. நன்றி.
பிரியமுடன் இரா.பிரசாந்த்

கருத்துரையிடுக

0 கருத்துகள்