நான்

பிறந்த நோக்கத்தை நித்தமும் தேடிக்கொண்டிருக்கும் ஒருவன் நான்...!
சிறந்த பெரியோர்களின் வாழ்க்கைகளைப் பாடமாகக் கற்றுக்கொண்டிருக்கும் சிறுவன் நான்..!
என் தாய்மொழி காயம்படும்போதெல்லாம் எழுத்தாணி முனைகொண்டு மருந்திட்டு புண்ணாற்றும் வைத்தியக்காரன் நான்...!


எனக்கான வெற்றிக்கனியை மற்றவர்கள் அபகரித்துக்கொள்ளும் சிலவேளைகளில் சிரித்துக்கொண்டே
ஏமாறும் பைத்தியக்காரன் நான்...!
தோல்விகள் துரத்தும் சமயம் புறம்காட்டி மதிலேறி ஓடுபவனல்ல நான்...!
அத்தோல்விகளிடம் கேள்விகள் கேட்டு அகம்காட்டி பதிலையே
நாடுபவன் நான்...!
இம்மாய உலகில் சிலநிழல் தாக்கி பலநிஜம் அறிந்தவன் நான்...!
அம்மா-வின் அருகில் பத்துவிரல் நீட்டி இருபுஜம் தூக்கி வியந்தவன் நான்...!
வேடிக்கையான மனிதர்களுக்கு நடுவில் தீ மூட்டும் தீரன் நான்...!
வாடிக்கையாகிப்போன வாழ்க்கைப்போர் முடிவில் கொடிநாட்டும் வீரனும் நான்...!

எப்பொழுதும் என் தமிழ்த்தாயின் மடியில் - இரா.பிரசாந்த்

கருத்துரையிடுக

0 கருத்துகள்