எனக்கு பிடித்த பாடல்

"மூடுபனி" படத்திலிருந்து "என் இனிய பொன் நிலாவே"என்ற பாடலில் இளையராஜாவின் ஓலி இசையும் பாலுமகேந்திராவின் ஒளி அசைவும் இந்த பிரசாந்தின் மனதை பிசைந்தேவிட்டது... இப்பாடலில் காதல் ஜோடிகளின் ஊடல்கள் பதியப்பட்டிருக்கும். ஆண், பெண்ணின் ஊடல்களை "எதார்த்தம்" துளியும் மீறாமல் உணர்வுப்பூர்வமாக படமாக்க முடியுமென்றால் 80 களில் பாலுமகேந்திராவை அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனலாம்... மற்றும் அந்த ஊடல்களுக்கு உயிர் கொடுக்கும் விதமாக இசை அமைத்திருப்பார் இளையராஜா. தமிழுக்கே உரிய அழகில் வரிகளை வடிவமைத்திருப்பார் கங்கை அமரன். அருமையாகப் பாடியிருப்பார் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள்.


இதோ அந்த பாடலின் வரிகள் ....
என் இனிய பொன் நிலாவே  பொன்நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் .... தொடருதே தினம் தினம் .... (என் இனிய..)  பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை சேர்ந்தாடும் இன்னேரமே என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை என் ஆசை உன்னோரமே வெண்நீலவானில் அதில் என்னென்ன மேகம் ஊர்கோலம் போகும் அதில் உள்ளாடும் தாகம் புரியாதோ என் எண்ணமே அன்பே..... (என் இனிய..)  பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே பூவான கோலங்களே தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே என்னென்ன ஜாலங்களே கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும் கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும் இது தானே என் ஆசைகள் அன்பே... (என் இனிய..)
வீடியோ லிங்க் கீழே....

https://m.youtube.com/watch?v=Y8lT9PTwDbs

படித்தது பிடித்திருந்தால் கமெண்டில் தெரிவிக்கலாம்..
எழுத்துக்கள் என்னை விமர்சிப்பதாகக்கூட இருக்கலாம்....! நன்றி.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

உங்கள் கருத்துக்களை பகிரவும்